Services

Friday, June 18, 2010

ENDHIRAN 3D ?????

படபிடிப்பில் தான் படபடப்பு. நேரில் அத்தனை அமைதி. அடர்த்தியான குளிர் அறையில் எந்திரன் பற்றி பேச ஆரம்பித்தார் ஷங்கர். (விகடனுக்கு அளித்த பேட்டி)
எந்திரன் 3d படமா ? 
'அப்படியா பேசிக்கிறாங்க...குட்!
'டேர்மிநேடர்','அவதார்',படங்களில் வெள்ளை பார்த்தவர்கள் எந்திரன் படத்திற்கு வேலை பார்திருகாங்க. அவ்வளவுதான் சொல்ல முடியும். இவ்வளவு நாளாகுதேன்னு சில பேர் கேக்கலாம். அவளவு காரணங்கள் இருக்கு. ஒரு ரோபோ திடீர்னு மனிதனாக உருமாறி வெளியே மனித கூட்டத்தில் திரிகிற விஷயம். ஏகப்பட்ட டெக்னாலஜி கலந்திருக்கு.இந்த அளவுக்குத்தான் ஒரு படம் இருக்கும்னு நினச்சி வந்தால், அதுக்கு பல படிகள் மேலே போயிருகோம். இது வரைக்கும் நீங்க பாக்காத புதுசு. கதையபத்தி detaila பேசலாம்தான். directoraagave  இருந்தாலும்.... இவ்வளவு தான் அனுமதி!"


எப்படி இருக்கார் ரஜினி?
"ரஜினி ரொம்ப அபூர்வம். புகழ்,பணம், அந்தஸ்து அதெலாம் இல்லை விஷயம். எப்பவுமே அவர் கிட்ட ஒரு நிதானத்தை, அமைதியை பாத்துகிட்டே வரேன். அதுதான் நான் தேடுறதும்! நீங்க உங்களுக்கு நேர்மையா இருக்கறது தான் மிக பெரிய சவால். ரஜினி அந்த சவால்ல ஜெயிச்சவர். அவர்கிட்டே மாறாத விஷயம், நடிப்பு மேலே இருக்குற துடிப்பு. கமல், விக்ரம் தான் இப்படி கேட்டுப் மாற்றம்னு முன்னணில நிப்பாங்க. அது அவங்களுக்கு கை வந்தது. இதுல ரஜினியும் அப்படி மாறிட்டார்.நாலு மணி நேரமா, ஆறு மணி நேரமா உட்கார்து மேக்கப் போட்டாலும் செய்யுறார்.டுப்பிங் பேசிட்டு கிளம்பினதும், போன் போட்டு ஷங்கர் அருமை..அருமை"னு சொல்வார்.மாலையில் இன்னொரு போனில் "மணிமணியா இருக்குனு" ஆசையா சொல்வார். அவரை வீழ்த்த ஆளே கிடையாது. அவரேதான் மாஸ்..அவரேதான் பாஸ்!"
ஐஸை ஜீன்சுக்கு பிறகு எப்படி பாக்குறீங்க?
"inteligent பொண்ணு " 'இந்திரன் தமிழ் படம்தான் ஆனால் என்னக்கு ஒரு இன்டர்நேஷனல் முகம் தேவை பட்டது. அது இஸ்வர்யா வை தவிர வேறு யாராக இருக்க முடியும்? ரஜினிஇன்  ஸ்டைலும் ராயின் அழகும் இந்த படத்திற்கு பெரிய atraction !"
"நீங்களும் ரஹ்மானும் இணைந்தால் கண்டிப்பாக musical treatthan . 


எந்திரனில் ரஹ்மானின் சாதனைகள் என்ன?
"ஆஸ்கரை விட ஆச்சர்யமான அம்சம், அதை இத்தனை நிதானமாகவும் பக்குவமாகவும் அவர் ஏற்றுகொண்ட விதம்தான்.'எந்திரனில் ஆறு பாடல்கள். மெலடி, வெஸ்டேர்ன் என எல்லா ராகங்களிலும் உண்டு. ரஹ்மான் தனது இசை பயணத்தில் உச்சத்தில் இருக்கும் நேரம். பாடல்களும் அப்படி இருபதுதான் நியாயம். இதில் அந்த magic நடந்திருக்கு.


மேலும்....

No comments:

Post a Comment

Your valuable comments here please...you may post anonymous but its strongly recommended for your emailid(protected)